law
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனு! – தீர்ப்பு ஜீலையில்

Share

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்திரணி இரட்ணவேல் தெரிவித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்த நிலையில், மீண்டும் திகதி இடப் பட்டதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

” யுத்தத்தின் கடைசிப் பகுதியில் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன் றத்தில் நேற்று (17) வழங்கப்பட இருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் முதலாம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஜுலை மாதம் முதலாம் திகதி நாம் தீர்ப்புக்காக காத்திருக்கின்றோம்.” – எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...