Arrested 611631070
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாணிக்கக்கல் அகழ்வு! – இருவர் கைது

Share

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19 ஆம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் , விஷேட அதிரடி படையினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஹொப்டன் 19 ம் கட்டை கீழ் பிரிவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் இடத்தை விஷேட அதிரடி படையினர் சுற்றி வளைத்தனர்.

இதன்போது மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 41,35 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்ததோடு மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விஷேட அதிரடி படையினர் கைது செய்யப்பட்ட இருவரையும் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடர உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...