Wijeyadasa Rajapakshe
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைவரும் இணங்கும் அரசியலமைப்பு விரைவில்!

Share

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

21ஆவது அரசியலமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்படுவதையடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள், 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது நீதியமைச்சரால் மகாநாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

2015ஆம் ஆண்டு 19ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதுடன் அதன்மூலம் ஜனநாயகத்தையும் பலப்படுத்த முடியும்.

அந்தவகையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்கு இடைப்பட்ட நாட்களில் அச் சட்டமூலம் தொடர்பில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியல் செய்வதற்கு நாடு ஒன்று அவசியமாகும். அந்த வகையில் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களின்றி ஒன்றிணைவது அவசியம் என்றும் இதன்போது மகாநாயக்க தேரர் நீதியமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...