ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்! – ரணில் அபாய எச்சரிக்கை

Share

இந்த வருடத்துக்குள் இலங்கை பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகத்துக்கும் ஏற்படும் என்றும், இதற்கு முகம்கொடுப்பதற்காக உலக உணவுத் திட்டமும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தயாராகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏற்படக் கூடிய நிலைமை தடுப்பதற்காக நாட்டில் பயிர்ச் செய்கைகளை ஊக்கப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர பிரதேசங்களில் ஏற்படக் கூடிய நிலைமையைத் தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...