ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்! – ரணில் அபாய எச்சரிக்கை

Share

இந்த வருடத்துக்குள் இலங்கை பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகத்துக்கும் ஏற்படும் என்றும், இதற்கு முகம்கொடுப்பதற்காக உலக உணவுத் திட்டமும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தயாராகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏற்படக் கூடிய நிலைமை தடுப்பதற்காக நாட்டில் பயிர்ச் செய்கைகளை ஊக்கப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர பிரதேசங்களில் ஏற்படக் கூடிய நிலைமையைத் தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...