colombo 1 e1652962832517
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பல்கலை மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

Share

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதனால் கோட்டையில் உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

‘கோட்டா – ரணில் சூழ்ச்சி அரசை விரட்டியடிப்போம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் விகாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து காலிமுகத்திடல் நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.

இவர்கள் மருதானை, புறக்கோட்டை ஊடாக உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் ஊடாக காலிமுகத்திடல் பக்கம் செல்ல முயன்றனர்.

இதன்போது அங்கு வீதித் தடைகளை போட்டிருந்த பொலிஸார், மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை நடத்தி மாணவர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர்.

எனினும், தொடர்ந்தும் மாணவர்கள் அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...