1578038553 sajith premadasa opposition leader 5
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசியல் நாடகங்களை விடுத்து தீர்வை மேற்கொள்ளுங்கள்! – சஜித் வலியுறுத்து

Share

சர்வதேசத்தை திருப்திப்படுத்த 13 பிளஸ் எனவும், உள்நாட்டில் அரசில் இருப்பை தக்க வைக்க 13 மைனஸ் எனவும் கூறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட அரசியல் தீர்வை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” 30 வருடகால போரை முடிவுக்குகொண்டுவருவதற்கு பெரும் பங்காற்றிய படையினரை இந்நாளில் நினைவுகூருகின்றேன். அதேபோல வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கருத்துகளையும் பெறப்பட்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13 பிளஸ் எனவும், 13 மைனஸ் எனவும் அரசியல் நாடகமாடாமல், 13 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக வழங்கப்பட்ட தீர்வை பாதுகாக்க வேண்டும்.

மே – 09 ஆம் திகதி நடைபெற்ற சம்பவங்களை நாம் கண்டிக்கின்றோம். வன்முறையுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மே 06 ஆம் திகதி அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அப்படி இருந்தும் இப்படியான சம்பவம் இடம்பெறுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

அலரிமாளிகையில் இருந்துதான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியதால்தான் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கவலையை வெளிப்படுத்திக்கொள்கின்றோம். மே – 09 மற்றும் அதற்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்களை நாம் அனுமதிக்க போவதில்லை. சிலர் இனவாதத்தை தூண்டுவதற்குகூட முற்பட்டனர். பொறுப்புக்கூற வேண்டியவர்கள், தகுதி தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...