280499896 6047996881894524 7995041358480417249 n
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜப்பானிடமிருந்து 4 பில்லியன் டொலர் இலங்கைக்கு!

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பானிய தூதுவர் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஜப்பான் தயாராக உள்ளது என ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொள்கையளவில் புதிய நிதி உதவியை வழங்கவும் ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ள அதேவேளை, ஜப்பானிய தனியார் அறக்கட்டளை நிலையம் ஒன்று 500 பில்லியன் யென் (தோராயமாக 4 பில்லியன் டொலர்) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.

பெற்றோல், டீசல், உரங்கள், அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அவசர தேவையுடைய பொருட்களை சர்வதேச சந்தைகளில் இருந்து வாங்குவதற்கு இந்த தனியார் அறக்கட்டளை தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...