ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர், பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
இந்நிலையிலேயே மொட்டு கட்சி எம்.பிக்களை சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கிடையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகள், ரணிலுக்கு ஆதரவு வழங்கக்கூடும் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்றம் வருவதற்காக, மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கள் மூவர், தமது பதவியை துறக்க தயாராக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
#SriLankaNews
Leave a comment