sunshine coast filling up car
இலங்கைசெய்திகள்

தேவையான எரிபொருளை தாமே கொள்வனவு செய்யலாம்! – விரைவில் அனுமதி

Share

நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்காளிக்கும் தெரிவுசெய்யப்பட்ட விசேட துறைகள், தமக்கு தேவையான எரிபொருளை தாமே நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்.

இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட பொருளாதார துறையினருக்கு பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...