அரசியல்
பஸிலின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கும் ஆப்பு??
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பி. பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி, 19 ஐ மீண்டும் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, 20 நீக்கப்பட்டால் பஸிலுக்கு எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.
You must be logged in to post a comment Login