maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

மாற்றப்பட வேண்டியவர் பிரதமரே! – அமைச்சரவையை ஏற்க முடியாது என்கிறது சுதந்திரக்கட்சி

Share

பிரதமர் பதவியில் மாற்றமின்றி இடம்பெறும் அமைச்சரவை மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அமைச்சு பதவியை ஏற்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

15 பேருடன் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது.

ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும், சரத் வீரசேகர, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அமைச்சரவை நியமனத்தை சுதந்திரக்கட்சி எதிர்த்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு மலரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

#SriLanka News

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...