wimal
அரசியல்இலங்கைசெய்திகள்

கௌரவமாகப் பதவி விலகுங்கள்! – மஹிந்தவிடம் விமல் வலியுறுத்து

Share

“2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளும் நடைமுறை என்பது சவாலுக்குரிய விடயமாகும். எனவேதான், புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைத்து, நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதற்குப் பிரதமர் பதவி விலக வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் நாட்டு மக்கள் ஏற்கும் அரசு அமைய வேண்டும்.

இந்த நோக்கில்தான் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தினர். அடுத்த சுற்றுப் பேச்சு நடத்தப்படுவதற்குள் எமது அணியில் உள்ள உறுப்பினரை விலைக்கு வாங்கிவிட்டனர். இந்தச் சில்லறைத்தனமான அரசியலை பஸில் ராஜபக்ச தனது சகாக்கள் ஊடாக ஆரம்பித்துள்ளார். ராஜபக்சக்களின் இந்தச் சலூன் கதவு விளையாட்டு எடுபடாது. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது.

எனவே, சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை ஜனாதிபதி உடன் பறித்து, அவரை அரசியல் ரீதியில் அநாதையாக்க வேண்டும். அதனைச் செய்தால் நாளை வேண்டுமானாலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தத் தயார். ஆனால் தொடர்ந்து அடம்பிடித்துக்கொண்டிருந்தால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...