tmvp
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு செய்த கொடுமையே ஆட்சியாளர்களுக்கு சாபக்கேடாக மாறியுள்ளது!

Share

73 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த கொடுமை, தற்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது. – இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் கைவிடப்பட்டு 13 வருடங்கள் ஆன நிலையிலும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு விளைவித்த பாவமே தற்போது சாபக்கேடாக மாறி இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் நிலையை உருவாகி உள்ளது.

யார் நாட்டை ஆட்சி செய்தாலும் நமக்கு பிரச்சினை இல்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படை உரிமையினை பெற்று தருவதையே நாம் கேட்கின்றோம்.

ஆனால் நாட்டு மக்கள் வறுமைக்குள் சிக்குண்டு அழிவடைந்தாலும் பிரச்சனை இல்லை. தாம் ஆட்சியை விட்டு விலகப்போவதில்லை என்று அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17487797691
சினிமாசெய்திகள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் ரீசெண்ட் க்ளிக்ஸ்..

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் ராணியாக திகழ்கின்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’, ‘கனா’,...

death
சினிமாசெய்திகள்

தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி...

WhatsApp Image 2025 06 01 at 17.50.09 683c46fc6b9bd
சினிமாசெய்திகள்

வெற்றி எனக்கென நினைத்தது இல்லை….!மனம் திறந்த காயத்திரி மற்றும் நசரின்..!

விஜய் டிவியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

maxresdefault 29 683c5da9b6598
இலங்கைசெய்திகள்

யூடியூபை அதிரவைக்கும் “விண்வெளி நாயகா..” பாடல்..! வெறித்தனமான அப்டேட்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த கனவு கூட்டணி ஒன்று 36 வருடங்களுக்குப் பிறகு...