3b495ad0 d9210262 blood donation
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் போதனாவில் குருதித் தட்டுப்பாடு! – உயிர்காக்க உதவுமாறு கோரிக்கை

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத நிலையில் இரத்த வங்கி உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரத்த வங்கியில் இருப்பில் உள்ள குருதி வெறும் நான்கு நாட்களுக்கே போதுமானதாக உள்ளது எனவும், நான்கு நாட்களில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்கள் இரத்ததானம் வழங்குவதற்கு முன்வருமாறு யாழ்ப்பாணம் இரத்தவங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புபவர்களோ அல்லது இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்புவார்களோ 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உயிர் காக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...