3b495ad0 d9210262 blood donation
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் போதனாவில் குருதித் தட்டுப்பாடு! – உயிர்காக்க உதவுமாறு கோரிக்கை

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத நிலையில் இரத்த வங்கி உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரத்த வங்கியில் இருப்பில் உள்ள குருதி வெறும் நான்கு நாட்களுக்கே போதுமானதாக உள்ளது எனவும், நான்கு நாட்களில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்கள் இரத்ததானம் வழங்குவதற்கு முன்வருமாறு யாழ்ப்பாணம் இரத்தவங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புபவர்களோ அல்லது இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்புவார்களோ 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உயிர் காக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....