3b495ad0 d9210262 blood donation
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் போதனாவில் குருதித் தட்டுப்பாடு! – உயிர்காக்க உதவுமாறு கோரிக்கை

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத நிலையில் இரத்த வங்கி உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரத்த வங்கியில் இருப்பில் உள்ள குருதி வெறும் நான்கு நாட்களுக்கே போதுமானதாக உள்ளது எனவும், நான்கு நாட்களில் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்கள் இரத்ததானம் வழங்குவதற்கு முன்வருமாறு யாழ்ப்பாணம் இரத்தவங்கி அழைப்பு விடுத்துள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புபவர்களோ அல்லது இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய விரும்புவார்களோ 0772105375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உயிர் காக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...