இனியும் நாடு முடங்காது! - சுகாதார அமைச்சர் நம்பிக்கை
செய்திகள்உலகம்

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

Share

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது.

இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன் கடக்க வேண்டும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நான்காவது அலை ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிட்டது. எம்மிடம் தடுப்பூசி இருந்த காரணத்தால் நான்காவது அலையின் பாதிப்பை முடிந்தளவில் தடுக்க முடிந்துள்ளது.நாட்டில், 80 வீதமானோர் ஒரு டோஸையாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.

56 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி அடுத்த மாதம் முதல் ஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுகளில் நான்காவது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. பிரான்ஸின் உள்ளேயும் இந்த நிலைமை விரைவில் தோன்றலாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டுக்காகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் இளவயதினரிடையே டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...