இனியும் நாடு முடங்காது! - சுகாதார அமைச்சர் நம்பிக்கை
செய்திகள்உலகம்

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

Share

இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது.

இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன் கடக்க வேண்டும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நான்காவது அலை ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிட்டது. எம்மிடம் தடுப்பூசி இருந்த காரணத்தால் நான்காவது அலையின் பாதிப்பை முடிந்தளவில் தடுக்க முடிந்துள்ளது.நாட்டில், 80 வீதமானோர் ஒரு டோஸையாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.

56 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி அடுத்த மாதம் முதல் ஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுகளில் நான்காவது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. பிரான்ஸின் உள்ளேயும் இந்த நிலைமை விரைவில் தோன்றலாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டுக்காகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் இளவயதினரிடையே டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...