Sritharan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது தாக்குதல்! – வரலாற்றில் பதிவான மோசமான சம்பவம்

Share

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பஸ்களில் பூட்டிவைத்து, பொலிஸார் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் இந்த சபையில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை வரலாற்றில் பதிவான மிகவும் கேவலமான சம்பவமாக இது பதிவாகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர்கள் வருகை தந்த பஸ்ஸை தடுத்து, அவர்களை பஸ்களுக்குள்ளேயே பூட்டி வைத்து மிகவும் கேவலமாக நடந்துகொண்டுள்ளனர். பஸ்ஸில் இருந்து இறங்கி முற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். உதைத்துள்ளனர். பெண்களை எப்படி ஆண் மருத்துவர் சோதிக்க முடியும். எனவே, மிகவும் கேவலமாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, இன்று சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நிலையை அன்று நாம் எதிர்கொண்டோம். பிரபாகரன் காலத்தில் இப்படி நடக்கவில்லை, பட்டினியில் எவரும் சாகவில்லை என சிங்கள மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது.” – என்றார் சிறிதரன் எம்.பி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...