Sritharan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது தாக்குதல்! – வரலாற்றில் பதிவான மோசமான சம்பவம்

Share

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பஸ்களில் பூட்டிவைத்து, பொலிஸார் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் இந்த சபையில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை வரலாற்றில் பதிவான மிகவும் கேவலமான சம்பவமாக இது பதிவாகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர்கள் வருகை தந்த பஸ்ஸை தடுத்து, அவர்களை பஸ்களுக்குள்ளேயே பூட்டி வைத்து மிகவும் கேவலமாக நடந்துகொண்டுள்ளனர். பஸ்ஸில் இருந்து இறங்கி முற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். உதைத்துள்ளனர். பெண்களை எப்படி ஆண் மருத்துவர் சோதிக்க முடியும். எனவே, மிகவும் கேவலமாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, இன்று சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நிலையை அன்று நாம் எதிர்கொண்டோம். பிரபாகரன் காலத்தில் இப்படி நடக்கவில்லை, பட்டினியில் எவரும் சாகவில்லை என சிங்கள மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது.” – என்றார் சிறிதரன் எம்.பி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...