Sritharan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் மீது தாக்குதல்! – வரலாற்றில் பதிவான மோசமான சம்பவம்

Share

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பஸ்களில் பூட்டிவைத்து, பொலிஸார் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் இந்த சபையில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை வரலாற்றில் பதிவான மிகவும் கேவலமான சம்பவமாக இது பதிவாகும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர்கள் வருகை தந்த பஸ்ஸை தடுத்து, அவர்களை பஸ்களுக்குள்ளேயே பூட்டி வைத்து மிகவும் கேவலமாக நடந்துகொண்டுள்ளனர். பஸ்ஸில் இருந்து இறங்கி முற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். உதைத்துள்ளனர். பெண்களை எப்படி ஆண் மருத்துவர் சோதிக்க முடியும். எனவே, மிகவும் கேவலமாக பொலிஸார் நடந்துகொண்டுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, இன்று சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நிலையை அன்று நாம் எதிர்கொண்டோம். பிரபாகரன் காலத்தில் இப்படி நடக்கவில்லை, பட்டினியில் எவரும் சாகவில்லை என சிங்கள மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை வந்துள்ளது.” – என்றார் சிறிதரன் எம்.பி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டணப் பட்டியல்: காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப்...

Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...