selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி மாநாடு! – டெலோவும் புறக்கணிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவும் தீர்மானித்துள்ளது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் அரசு கையாளும் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் பல தரப்புகளிடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரமே தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என ரெலோ அறிவித்துள்ளது.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ். வந்திருந்தபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பாதுகாப்பு தரப்பினரால் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுள்ள ரெலோ, புறக்கணிப்புக்கு இந்த விடயத்தையும் ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் என்பன சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...