Gas 1
செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!

Share

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை உச்சம் தொட்டுள்ளது.

இதனால் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன எனவும், இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அறியமுடிகின்றது.

சமையல் எரிவாயுவுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதால், விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு, அரசிடம், நிறுவனங்கள் அனுமதி கோர வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

” தாங்கிக்கொள்ள முடியாத அளவு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதில் அரசு தலையிடும்” – என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...