ranil wickremesinghe 759fff
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும்! – ரணில்

Share

” இந்தியாவுடன் இலங்கை சிறந்த நல்லுறவைப் பேண வேண்டும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை, இந்தியாவுக்கிடையில் பல நூற்றாண்டுகாலமாக நட்புறவு இருந்துவருகின்றது. அந்நாட்டில் இருந்தே பௌத்த மதம்கூட இலங்கை வந்தது. கலாச்சார ரீதியிலான உறவும் இருக்கின்றது.

எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதற்காக பிற நாடுகளுடன் உறவாடக்கூடாது என்றில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வகையிலேயே செயற்பட வேண்டும்.

ஆனால் இந்த அரசு நட்பு நாடுகளைக்கூட பகைத்துக்கொண்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இலங்கை மௌனம் காப்பதே சிறந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் ரஷ்யா மற்றும் அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள வேண்டிவரும்.” – என்றார் ரணில்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...