8 10
இலங்கைசெய்திகள்

பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு

Share

பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு இலங்கையின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த சில மாதங்களாக கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever – ASF) நோய், மேலும் பரவுவதனை தடுக்கும் நோக்கில், விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் “ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகள்” எனவும், பன்றிகள் “நோய் அபாய விலங்குகள்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு 59ம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி கடந்த 3 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் மூன்று மாதங்களுக்கு வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகளில் இருந்து நோயை பரப்பக்கூடிய சில நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் வர்த்தமானியில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...