asela sampath
செய்திகள்இலங்கை

உணவகங்கள், ஹோட்டல்களுக்கும் பூட்டு!

Share

நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில்,

நாட்டில் பரவலாக எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்துடன் மின்வெட்டும் அமுலாக்கி வருகிறது. எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில், நாட்டில் பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வை முன்வைக்காவிடின் ஹோட்டல், உணவகம் மற்றும் பேக்கரி துறைகள் முழுவதுமாக பாதிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையால், உணவு வாங்குவதில் மக்கள் மிகப்பெரும் சிரமத்தை எதிநோக்கி வருகின்றனர் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...