வடக்கில் ரயில் மோதி ஒருவர் பலி
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் ரயிலுடன் மோதி இருவர் சாவு!

Share

வடக்கில் இன்று ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழந்தனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம், கோவில் வீதியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அதனை வீதியில் நிறுத்திவிட்டு ரயில் முன் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மாங்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியே விபத்துக்குள்ளாகி மரணமானவராவார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...