வடக்கில் ரயில் மோதி ஒருவர் பலி
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் ரயிலுடன் மோதி இருவர் சாவு!

Share

வடக்கில் இன்று ரயிலுடன் மோதுண்டு இருவர் உயிரிழந்தனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம், கோவில் வீதியில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அதனை வீதியில் நிறுத்திவிட்டு ரயில் முன் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மாங்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதியே விபத்துக்குள்ளாகி மரணமானவராவார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...