நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

Share

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல் என நினைத்து வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் மூன்று நாள்களாகியும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் பரவலாக கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த வர்த்தகரை நலம் விசாரிப்பதற்காகச் சென்ற அவரின் உறவினர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், யாழிலும் தொற்றாளர்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் விழிப்புணர்வின்றி பொறுப்பற்ற நிலையில் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகலால் சுகாதாரத்துறையினர் விசனமடைந்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...