நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
செய்திகள்இலங்கை

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

Share

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! – தென்மராட்சியில் சம்பவம்

தென்மராட்சி பகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்மராட்சி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல் என நினைத்து வீட்டில் ஓய்வெடுத்த நிலையில் மூன்று நாள்களாகியும் காய்ச்சல் தொடர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் பரவலாக கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் சடுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த வர்த்தகரை நலம் விசாரிப்பதற்காகச் சென்ற அவரின் உறவினர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், யாழிலும் தொற்றாளர்கள் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் விழிப்புணர்வின்றி பொறுப்பற்ற நிலையில் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகலால் சுகாதாரத்துறையினர் விசனமடைந்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...