5
செய்திகள்இந்தியாஇலங்கைபிராந்தியம்

சுப்பர்மடம் – மீனவர்கள் போராட்டத்துக்கு தடை விதித்தது நீதிமன்று!

Share

தொடர்ந்து நான்கு நாட்களாக பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் வீதியை மறித்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் வலுப்பெற்றுவரும் நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், பருத்தித்துறை பொலிஸார் மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இன்றைய தினம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதனால் வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா அபாயம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பொலிஸாரால் தடைகோரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நீதிமன்றால் மீனவர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நீதிமன்ற கட்டளையின் பிரகாரம், வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடி படையினரும் போராட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
செய்திகள்அரசியல்இலங்கை

வாழைச்சேனை சம்பவங்கள் பௌத்த-சிங்கள சமூகத்தைத் தூண்டும் சதி: ஞானசார தேரர் எச்சரிக்கை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள்...

images 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரன் போராட்டத்தை அழித்த ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கில் காலூன்ற முயற்சிக்கின்றனர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கும், இன அழிப்பிற்கும்...

images 2 3
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் ‘தெஹி பாலே’க்கு சொந்தமான ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள 5 மீன்பிடி இழுவைப் படகுகள் பறிமுதல்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தெஹி பாலே” என்று அழைக்கப்படும் செஹான் சத்சாரவுக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஐந்து...