20220131 232802 scaled
செய்திகள்இந்தியாஇலங்கை

அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகு பருத்தித்துறை மீனவர்களால் மடக்கிப் பிடிப்பு!!

Share

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது.

உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்த இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தில் சமரச முயற்சியில் ஈடுபட்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்க பருத்தித்துறை மீனவர்கள் மறுத்ததுடன் அவரை இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்திய இழுவைப் படகு நேற்று பின்னிரவு பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை அவதானித்த சுப்பர்மடம் மீனவர்கள் பருத்தித்துறை மீனவர்களுடன் இணைந்து 9 படகுகளில் சென்று முற்றுகையிட்டனர்.

இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகிலிருந்த வலைகள் மற்றும் மீன்களை கைப்பற்றினர்.

சம்பவத்தையறிந்து அங்கு விரைந்த இலங்கை கடற்படை இந்திய இழுவைப் படகை கையகப்படுத்தியதுடன் அதிலிருந்த மீனவர்களைக் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கரை திரும்பிய பருத்தித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

20220201 000118 20220131 233123

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f0e9cb2a9609e8e8b47dcbf4f046f1565241cfcf252679380eda49246f121e33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: 41 பேர் பலி; சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல்! விஜய் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் (செப்...

images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...

Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...