z p03 Tissa
செய்திகள்அரசியல்இலங்கை

நாடகம் அரங்கேற்றும் மஹித்தானந்த! – குற்றம் சுமத்துகிறார் திஸ்ஸ அத்தநாயக்க

Share

” விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தெரிவுசெய்யப்பட்ட சில வயல் நிலங்களுக்கு தற்போது விவசாயத்துறை அமைச்சர் செல்கின்றார். விவசாயிகள் எனக் கூறப்படும் சிலருடன் கலந்துரையாடுகின்றார். அறுவடை எப்படி என அவர் கேட்க, சிறப்பு சேர் என விவசாயிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் பதில் வழங்குகின்றனர்.

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலரை தூண்டிவிட்டு விவசாயத்துறை அமைச்சர் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். அவருக்கு விவசாயிகள் தக்க பதிலை வழங்குவார்கள்.” – என்றார்.

அதேவேளை, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...