z p03 Tissa
செய்திகள்அரசியல்இலங்கை

நாடகம் அரங்கேற்றும் மஹித்தானந்த! – குற்றம் சுமத்துகிறார் திஸ்ஸ அத்தநாயக்க

Share

” விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தெரிவுசெய்யப்பட்ட சில வயல் நிலங்களுக்கு தற்போது விவசாயத்துறை அமைச்சர் செல்கின்றார். விவசாயிகள் எனக் கூறப்படும் சிலருடன் கலந்துரையாடுகின்றார். அறுவடை எப்படி என அவர் கேட்க, சிறப்பு சேர் என விவசாயிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் பதில் வழங்குகின்றனர்.

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலரை தூண்டிவிட்டு விவசாயத்துறை அமைச்சர் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். அவருக்கு விவசாயிகள் தக்க பதிலை வழங்குவார்கள்.” – என்றார்.

அதேவேளை, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...