iranaimadu
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத மணல் அகழ்வு! – ஆபத்தின் விளிம்பில் இரணைமடு குளம்

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தின் மிகப்பெரும் வளமான இரணைமடு குளம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ‌ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்டச் செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில், நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

“சில வருடங்களே இங்கு அதிகாரிகளாகிய நாங்கள் கடமையில் இருப்போம். ஆனால், இங்குள்ள மக்களும் சமூகமும் இப் பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றனர்.

மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

இரணைமடு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.

எமது நிலத்தின் வளங்களை பாதுகாக்க சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது.

இந்த அடிப்படையில், முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து இடங்களை அடையாளப்படுத்தி, காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...