boat
செய்திகள்இந்தியாஇலங்கை

அத்துமீறும் தமிழக மீனவர்கள் – படகுகள் ஏலம்!

Share

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

இதன்படி

பெப்ரவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளும்
பெப்ரவரி 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளும்
பெப்ரவரி 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளும்
பெப்ரவரி 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளும்
பெப்ரவரி 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளும்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது படகுகள் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள விடயத்தை மீள் பரிசோதனை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவனைக்கு உகந்த நிலையில் காணப்படும் படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...