Arrested 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் கைது!

Share

அலுபோமுல்ல சாந்தி மாவத்தையிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான ஹொரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இயங்கி வருவதாக கூறப்படும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பாணத்துறை சாலிடு’ என்பவரின் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் பொதிகளை பொதி செய்யும் நிலையமாக குறித்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு கிலோ போதைப்பொருளை பொதி செய்வதற்கு 250,000 ரூபாவை “பானதுறை சாலிடு” என்ற போதைப்பொருள் கடத்தக்காரர் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 25, 30 வயதுகளையுடையவர்கள் என்பதுடன், அலுபோமுல்ல, சாந்தி மாவத்தை, ஆரஞ்சு கோட்டை பகுதியில் வசிப்பவர்களாவர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...