dvfdbhg
செய்திகள்இலங்கை

மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள்: பீதியடையவைக்கும் மாயம்

Share

பாணந்துறை டிப்பெத்த கிராமம் பொதுமயானமொன்றின் அருகாமையில் அமைந்துள்ளது .கிராமத்தில் ஒரு மாத காலமாக மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிராம மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்துக்கொள்வதாகவும், இதுவரையில் தாக்குதல்களை யார் மேற்கொள்கின்றனர் என கண்டறியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அண்மைய நாட்களிலிருந்து மதுபான போத்தல்களினாலும் தாக்குதல் நடாத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலில் வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளன. சில சமயங்களில் கற்களில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கிராம மக்கள் சென்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் போது வேறு ஒரு பக்கத்திலிருந்து கற்கள் வீசப்படுவதாகவும். மக்கள் வீடுகளில் இருக்கின்றார்களா இல்லையா என்பது தெரிந்தவர்களே தாக்குதல் நடாத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தாக்குதல் நடாத்தப்படுவதனால் மக்கள் பெருமளவில் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...