625.500.560.350.160.300.053.800.900.160.90
செய்திகள்இலங்கை

நாடு முடக்கப்படும் அதற்கான நேரத்தை ஜனாதிபதியே தீர்மானிப்பர்-காமினி லொக்குகே

Share

நாடு முடக்கப்படும் அதற்கான நேரத்தை ஜனாதிபதியே தீர்மானிப்பர்-காமினி லொக்குகே

கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

எனவே, தற்போதைய கொரோனா நிலைமையில் நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பாரக்கப்படுகிறது.

பொதுமுடக்கம் அல்லது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும், மேல்மாகாணம் குறித்து விசேட கவனம் செலுத்தவும் அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...