1616843907595
செய்திகள்இலங்கை

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

Share

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றை காரணம் காட்டி நாடு முடக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்துடன் அன்றாடம் தொழில் செய்து வாழ்வோர் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

நாடு முழுமையாக முடக்கப்படாவிடினும், மக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விதிக்கப்படும் தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...