Fisherwomen
செய்திகள்இந்தியா

மீன் நாற்றம் வருகிறது: மீன் விற்கும் பெண்ணை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்ட நடத்துனர்

Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்று வரும் பெண்ணை பேருந்தில் ஏறவிடாமல் நடத்துனர் தடுத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாகப் பேருந்து நிலையத்திலேயே அந்த பெண்மணி நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோக் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

குமரி மாவட்டத்தின் குளைச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற பெண், குளைச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு, தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில், அரசு பேருந்தில் பயணித்த போது, மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக்கூறி பேருந்திலிருந்து குறித்த பெண்ணை நடத்துனர் இறக்கிவிட்டுள்ளார்.

பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்… இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா எனக் கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.

இதுதொடர்பான காணொளிக்காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து சாரதி மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...