sarath
செய்திகள்அரசியல்இலங்கை

கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்! – பொன்சேகாவுக்கு வீரசேகர எச்சரிக்கை

Share

” கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய முற்பட வேண்டாம்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பொன்சேகா எம்.பி. தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

” பொன்சேகாவின் குணம் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நல்லாட்சியின்போது அவருக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. ஆனால் இன்று பாதுகாப்பு அமைச்சு பதவி பற்றி கனவு கண்டுகொண்டிருக்கிறார்.

யுத்தம் முடிவடைந்த பிறகு தேவையற்ற விதத்தில் ஆயுத கப்பலொன்றை கொண்டுவந்தார். அதனை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் திருப்பி அனுப்பியதாலேயே அவருடன் பொன்சேகா முரண்பட்டார். எனவே, கண்ணாடி கூட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...