20211130 122127 scaled
செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் – யாழ் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு!

Share

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ் இந்திய துணைத்தூதுவராலயத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் கலந்துகொண்டண்டனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த அத்துமீறலால் எமது மீனவர்கள் கூலித் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதோடு குடிப்பரம்பலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிராக நீண்ட காலமாக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிற. எனினும் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வருகையை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம்.

இந்தநிலையில், இன்றைய தினம் யாழ். இந்திய துணைத் தூதரை சந்தித்து பேசி உள்ளோம்

குறிப்பாக, இந்திய மீனவர்களின் அத்துமீறலால் நாம் பல கோடி ரூபா சொத்துகளை இழந்துள்ளோம். இந்திய மீனவர்களுக்கும் வடக்கு மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

இலங்கை கடற்தொழில் அமைச்சு 500 கோடி ரூபாக்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளது. இருந்தபோதிலும், அண்ணளவாக 400 மில்லியன் ரூபாவை எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறு கூறி, அதற்குரிய திட்டத்தை கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்திருக்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம். இந்த கோரிக்கையினை பரிசீலிப்பதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த்துள்ளார்.

இதேவேளை, இலங்கைமீனவர்களின் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் யாழ். இந்திய துணைத் தூதுவர் பேசி உள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...