20211130 122127 scaled
செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் – யாழ் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு!

Share

யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ் இந்திய துணைத்தூதுவராலயத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் கலந்துகொண்டண்டனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த அத்துமீறலால் எமது மீனவர்கள் கூலித் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதோடு குடிப்பரம்பலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிராக நீண்ட காலமாக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிற. எனினும் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வருகையை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம்.

இந்தநிலையில், இன்றைய தினம் யாழ். இந்திய துணைத் தூதரை சந்தித்து பேசி உள்ளோம்

குறிப்பாக, இந்திய மீனவர்களின் அத்துமீறலால் நாம் பல கோடி ரூபா சொத்துகளை இழந்துள்ளோம். இந்திய மீனவர்களுக்கும் வடக்கு மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.

இலங்கை கடற்தொழில் அமைச்சு 500 கோடி ரூபாக்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளது. இருந்தபோதிலும், அண்ணளவாக 400 மில்லியன் ரூபாவை எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறு கூறி, அதற்குரிய திட்டத்தை கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்திருக்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம். இந்த கோரிக்கையினை பரிசீலிப்பதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த்துள்ளார்.

இதேவேளை, இலங்கைமீனவர்களின் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் யாழ். இந்திய துணைத் தூதுவர் பேசி உள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...