unnamed 4
செய்திகள்இலங்கை

நேற்று முதல் ஆரம்பமான விசேட பொலிஸ் நடவடிக்கை!!

Share

கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட பொலிஸ் நடவடிக்கை நேற்று முதல் மேல் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது.

நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் பொலிஸாரின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடும்போது, மேல் மாகாணத்தில் மொத்தம் 23,193 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முகக் கவசங்களை அணியாத 4,351 பேருக்கு பொலிஸார் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர்.

அத்துடன், 7,105 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் இன்னும் நாட்டிலுள்ள சிக்கலை புரிந்துக்கொள்ளாமல் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணத் தயாராகவில்லை.

1,475 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25-இல் பரிசீலனை!

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத்...

10 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரும்புக் கம்பி துளைத்த நபர்: பதுளை வைத்தியசாலையில் உயிர் காக்கப்பட்ட அதிசயம்!

பதுளை போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Badulla) வைத்தியக் குழுவினர், வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக...

09 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணைவோம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச்...

08 20
செய்திகள்உலகம்

ஈரான் மறுப்பு: ஜனாதிபதி ட்ரம்புடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்திருந்த கருத்தை ஈரான்...