avatar
இலங்கைஅரசியல்செய்திகள்

நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன! – சாடுகிறார் பிமல் ரத்னாயக்க

Share

நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், உர நெருக்கடியால் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில்,  நானோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.

நாட்டின் வளங்கள் நாளாந்தம் விற்கப்படுகின்றன. மேற்கு முனையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியையும் அரசாங்கம் சீனாவிடம் கையளித்துள்ளது.

கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய கடன் நெருக்கடியானது கொவிட்-19 தொற்று நோயினால் அல்ல. அதிகாரத்தில் உள்ளவர்களினால்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...