Dylan Pereira
செய்திகள்அரசியல்இலங்கை

கம்பி மீது சைக்கிளில் பயணிப்பது போன்ற காலத்திலும் திருப்தியான பாதீடு!

Share

கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்.”- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு புகழாரம் சூட்டினாரம்.

” கொரோனா பெருந்தொற்றால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளும் ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் இருந்து மீள்வதென்பது சவாலுக்குரிய விடயமாகும்.

இக்காலப்பகுதியில் பயணிப்பதென்பது கம்பி மீது சைக்கிள் சவாரி செய்வதுபோன்றதாகும்.

நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களுக்கு பாரிய சுமைகளை திணிக்காத, இருப்பவர்களிடமிருந்து வரிகளை அறவிடும் பாதீட்டை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.

2022 ஆம் ஆண்டிலாவது அரசியல், கட்சி, இனம், மத பேதங்களை மறந்து இலங்கையர்களாக செயற்படுவோம். அப்போதுதான் முன்னோக்கி பயணிக்கக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 7 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி...

01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...