sajith protest
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.ம.சவின் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோரைத் திருப்பியனுப்பும் பொலிஸார்!

Share

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இலக்கம் 5 கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு நீதிமன்றமானது உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு, தடைவிதிக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு பொரளை காவல்துறை, இலக்கம் 2 கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு – விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தது.

இந்தநிலையில் சில நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கைகளை நேற்று (15) நிராகரித்தது. மேலும், சில நீதிமன்றங்கள் அந்தக் கோரிக்கையினை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போராட்டதில் பங்கேற்பதற்கு வாகனங்களில் சென்றவர்களை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

மேலும் பல பகுதிகளிலும் வீதி தடைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் சில பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...