sajith protest
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.ம.சவின் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோரைத் திருப்பியனுப்பும் பொலிஸார்!

Share

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இலக்கம் 5 கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு நீதிமன்றமானது உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு, தடைவிதிக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு பொரளை காவல்துறை, இலக்கம் 2 கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு – விகாரமாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்குமாறு காவல்துறை நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்தது.

இந்தநிலையில் சில நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கைகளை நேற்று (15) நிராகரித்தது. மேலும், சில நீதிமன்றங்கள் அந்தக் கோரிக்கையினை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வாழ்க்கை செலவு அதிகரிக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிலைப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போராட்டதில் பங்கேற்பதற்கு வாகனங்களில் சென்றவர்களை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

மேலும் பல பகுதிகளிலும் வீதி தடைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் சில பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...