durmp 1
உலகம்

ட்ரம்பின் கையொப்பம் இல்லை – சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது புதிய சட்டம்.

Share

 

ரொனால்ட் ட்ரம்பின் கையொப்பம் இல்லாமலே அமெரிக்காவில் 21 ஆம் நூற்றாண்டு வீட்டுவசதிச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

21 ஆம் நூற்றாண்டு வீட்டுவசதிச் சட்டமானது வீடு வாங்குவோர், வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீடு கட்டுவோருக்கான மத்திய அரசின் கொள்கையில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக காணப்படுகின்றது.

ரொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட சட்டமூலத்தில் கையெழுத்து இடாத காரணத்தினால் இந்த சட்டம் தற்போது தானாகவே நடைமுறைக்கு வரவுள்ளது.

“SAVE America Act” என்ற தேர்தல் சட்டத்தை வீட்டுவசதி சட்டத்துடன் சேர்க்க விரும்பியதால் அமெரிக்காவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் நிறைவேறிய வீட்டுவசதி மசோதாவில் ரொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து இட மறுத்தார்.

ஆனால் அந்த “SAVE America Act” என்ற சட்டத்திற்கு போதுமான ஆதரவு கிட்டவில்லை என்பதனால் ஆத்திரமடைந்த டொனால்ட் ட்ரம்ப் வீட்டு வசதி சட்டமூலத்தில் கையொப்பமிட மறுத்துவிட்டார்.

அந்த நாட்டின் சட்டத்தின்படி, ஜனாதிபதி ஒரு சட்டமூலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டோ (Veto) செய்யாமல், கையெழுத்திடாமலும் இருந்தால், 10 நாட்கள் கழித்து அது தானாகவே சட்டமாகிவிடும்.

அந்த வகையில் இந்த வீட்டுவசதி சட்டமூலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தானாகவே நடைமுறைக்கு வர இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்திகளினை வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...

fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின்...