india 12
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரனின் மகன் மரணம் குறித்து போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

Share

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரனின் சிறு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கண்டிப்பாக யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகனோ அல்லது ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமான சஹ்ரான் உயிரிழந்தபோது அவரது மகளோ கொல்லப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரபாகரனின் சிறு வயது மகனுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.

பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சனல் 4 ஆவணப்படத்தின் ஆதாரங்களை நிராகரித்துள்ளதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், பாலச்சந்திரன் பதுங்கு குழியில் உணவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும், அதன் பின்னர் அவரது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளங்களுடன் அவர் கிடக்கும் புகைப்படமும் ஆவணப்பட ஆதாரங்களாக வெளிவந்துள்ளதாகக் கூறினார். ஒரு பயங்கரவாதியின் மகனாக இருந்தாலும் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாதவை என்றும், போர்க்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நடந்திருப்பது உண்மையானால் அது நிச்சயமாக ஒரு யுத்தக்குற்றமாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...