1 218jghjghjghj
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

Share

எதிர்வரும் நாள்களில் நாடு முழுவதும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த அபாயநிலை ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தற்போது 60 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 லட்சம் கிலோ மரக்கறிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் மரக்கறிகளே கிடைக்கப்பெறுகின்றன என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன ¨ªஎனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை எதிர்வரும் நாட்களில் தொடருமாயின் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நாடளாவிய ரீதியில் ஏற்படும் என வர்த்தகர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...