df4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

47 பேருக்கு வவுனியாவில் தொற்று

Share

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் பெறுபேறும் நேற்று வெளியாகிய நிலையில் 47 பேர் கொரோனாத் தொற்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் மறவன்குளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிராமபுரம், சிதம்பரபுரம், வன்னிக் கோட்டம் மற்றும் பூவரசன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 5 வயதுக்கு குறைவான 3 சிறுவர்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...