16
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்துப் போராட்டம்: நீதியமைச்சுக்கு அனுப்பிவைப்பு!

Share

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் திரட்டப்பட்ட கையெழுத்துகள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை நேற்று (28.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு முழுவதும் சிவில் சமூக அமைப்புகளால் நடத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று முன்தினம் (27.02.2026) நிறைவுக்கு வந்தது.

இதையடுத்து, நேற்றைய தினம் திரட்டப்பட்ட அனைத்துக் கையெழுத்துகளும் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதிசெய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கும், இந்தியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட தூதரகங்களிடம் நேரில் கையளிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலப்பகுதியில் குறிப்பிட்ட சில சிவில் அமைப்புகள் இணைந்து அரசு கொண்டுவர எத்தனிக்கும் மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெருமளவிலான கையெழுத்துகள் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...