ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

தடைகளை கண்டு நாம் பின்வாங்க மாட்டோம்! – ரஞ்சித் மத்தும பண்டார

Share

” ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு அஞ்சிவிட்டது. அதனால்தான் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நாம் பின்வாங்க மாட்டோம். திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கொரோனாவால் நாட்டில் நாளாந்தம் 200 பேர் பலியானபோதுகூட கடும் கட்டுப்பாடுகளை அரசு உடன் விதிக்கவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்தான் அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே அரசு இப்படி செயற்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் நடைபெறும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...